Date:

கெஹெலியவின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை முடக்கி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இருப்பினும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஓய்வூதியம் மற்றும் அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதத்திற்கு பெறப்பட்ட 9.59 பில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வைப்புச் செய்யப்பட்டுள்ள பாராளுமன்றக் கிளை வங்கிக் கணக்கும் நீதிமன்ற உத்தரவின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.

 

எனவே, குறித்த வங்கிக் கணக்கின் மீதான முடக்கத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் சமீபத்தில் கோரியிருந்தனர்.

 

மேற்படி கோரிக்கை தொடர்பான முடிவை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, தொடர்புடைய கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட...