Date:

அரச வைத்திய அதிகாரிகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது.

 

இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரசாங்க அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குள் இவை திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

 

“6 ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தத்தைச் செய்யுங்கள், 7 ஆம் திகதியிலிருந்து நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். 7 ஆம் திகதிக்குப் பிறகு, சுகாதார சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்.” என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...