Date:

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் 6 வது சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று அந்த சந்தேக நபரை கைது செய்தது.

 

இந்த சந்தேக நபர் மூக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

 

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

 

இதன்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...