Date:

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் விசேட அறிவிப்பு

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று (25) கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

 

மேலும் விளக்கமளித்த அவர், சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

“ஆசிரியர்களின் சம்பளத்தை மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. பாடசாலை அதிபர்களின் சம்பளம் 30,105 ரூபாயாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாயாலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பள்ளி கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 6,019 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பிற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழகம் நோக்கி புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு...

மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை மோடி திறந்து வைத்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.   அங்கு,...

மோடிக்கு புலி படம் குடுத்த சஜித்!

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த "ஐ-ஒன்" (eye-one)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373