Date:

தேசபந்துக்கு எதிரான மனு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (ஐ.ஜி.பி.) நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் திங்கட்கிழமை (24) அன்று உயர் நீதிமன்றத்தால் வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

 

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரண திங்கட்கிழமை (24) அன்று உயர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது, தேசபந்து தென்னக்கோன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சட்டத்தரணியின் கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், இந்த மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...