Date:

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டுச் சம்பவம்- மோதரையில் ஒருவர் கைது

கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் துணைக்கருவி கடையின் உரிமையாளரை சுட்டுக் கொல்லும் உள்ளூர் திட்டத்தை வழிநடத்தியவரும், துப்பாக்கியை வழங்கியவருமான நபர் முகத்துவாரம் (மோதர) மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொபைல் போன் துணைக்கருவிகள் கடைக்குள் புகுந்து, அதன் உரிமையாளரான கொழும்பு 14, ஸ்டேட் ரோட்டைச் சேர்ந்த 38 வயது சஷி குமார் என்பவரை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தப்பி ஓடிவிட்டனர். இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், அவரது ஆலோசனையின் பேரில் இந்த நாட்டில் குற்றச் செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...