Date:

குருநாகல் பேருந்து விபத்து வெளியான அதிர்ச்சி தகவல்

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் தோரயாய பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

 

தற்போது ஐந்து நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகக் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

 

இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி நேற்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

நேற்று (10) அதிகாலை இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

காயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

குருநாகல் நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் உள்ள தோரயாய பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

கதுருவெலவிலிருந்து குருநாகல் நோக்கி வழித்தடம் 48 இல் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தோரயாய பகுதியில் நின்றிருந்த தனியார் பேருந்தின் மீது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து மோதியது.

 

குறித்த பேருந்து மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகத்தில் பயணித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பேருந்து மீது மற்றைய பேருந்து மோதியதில் அருகில் இருந்து தோட்டமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து மரமொன்றில் மோதி நின்றுள்ளது.

 

இதனையடுத்து, பிரதேசவாசிகள் விரைவாகச் செயல்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த...

உலகத் திருமதி அழகிப் போட்டி;சபீனா யூசுப், மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர்...

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து…

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி,...

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது...