Date:

13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – பொலிஸார் வௌியிட்ட தகவல்

 

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

ஏனைய 6 சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...