இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏனைய 6 சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.