Date:

13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – பொலிஸார் வௌியிட்ட தகவல்

 

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

ஏனைய 6 சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் தீ

சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த...

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர்…

இன்று (16) காலை பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் ஈரானிய...

கொழும்பு மேயராக வ்ரே காலி பால்தசார் தெரிவு

இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர...

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373