Date:

அரசாங்கத்திற்கு 2 வார கால அவகாசம் வழங்கிய மருத்துவ பீடம் மாணவர்கள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து சச்சிந்த தெரிவித்தார்.

அந்த இரண்டு வார காலத்திற்குள் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவிற்கும் இடையில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவிந்து சச்சிந்த இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவாக எங்கள் நிலைப்பாட்டை விளக்கினோம். எங்களுக்கு முன்பு கூறப்பட்டது போல, அரச வைத்தியசாலைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதை அரசாங்கம் எதிர்த்தது. அது எங்களுக்கு முக்கியமில்லை. நான் நாட்டுக்கு அதைச் சொல்ல விரும்புகிறேன். அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய நாங்கள் அரசாங்கத்திற்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளோம். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளை நிறுவுவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டிற்குச் சொல்லுங்கள்.

பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ பீட மாணவர்கள் நேற்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது, ஓல்கோட் மாவத்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் அவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373