Date:

அரசாங்கத்திற்கு 2 வார கால அவகாசம் வழங்கிய மருத்துவ பீடம் மாணவர்கள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து சச்சிந்த தெரிவித்தார்.

அந்த இரண்டு வார காலத்திற்குள் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவிற்கும் இடையில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவிந்து சச்சிந்த இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவாக எங்கள் நிலைப்பாட்டை விளக்கினோம். எங்களுக்கு முன்பு கூறப்பட்டது போல, அரச வைத்தியசாலைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதை அரசாங்கம் எதிர்த்தது. அது எங்களுக்கு முக்கியமில்லை. நான் நாட்டுக்கு அதைச் சொல்ல விரும்புகிறேன். அமைச்சரவை முடிவுகளை இரத்துச் செய்ய நாங்கள் அரசாங்கத்திற்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளோம். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளை நிறுவுவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டிற்குச் சொல்லுங்கள்.

பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ பீட மாணவர்கள் நேற்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது, ஓல்கோட் மாவத்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் அவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...