Date:

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பு

 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே ஒரு சுமூகமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

 

நேற்று (05) காலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

 

 

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

 

இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றுள்ளார்.

 

 

அண்மித்த நாடுகளாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர உறவுகளையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமாக வேரூன்றியுள்ள மத, கலாசார மற்றும் சமூக உறவுகளையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

 

 

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவுகளை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373