Date:

ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற டிபெண்டர் வாகனம் விபத்து- 4பேர் காயம்

 

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று தலாவ பிரதேசத்தில் இன்று (1) அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 

 

இதன்படி விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றுமொரு வாகனம் மூலம் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

காயமடைந்தவர்களில், சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏனையவர்கள் இலங்கை காவல்துறையில் கடமையாற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுங்க இயக்குனர் ஜெனரலை உடனடியாக கைது செய்!

சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய...

இலங்கை வரும் கீதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா...

4 மாணவிகளை AI மூலம் நிர்வாணப்படுத்திய 2 மாணவர்கள்

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில்...

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373