Date:

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

“.. இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு சந்தையில், நிர்ணய விலைக்கு புறம்பாக சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் செயற்பாடு முற்றாக ஒழிக்கப்படும்.

 

தற்போது உடனடியாக இதனை செய்வதற்கு முயன்றால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

 

அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

 

அந்த முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரே இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குடும்ப ரீதியாக எவரும் கைது செய்யப்படவில்லை, குடும்ப ஆட்சி நிலவியமையினாலேயே முன்னாள் அமைச்சரின் மனைவியும் கைதாகினார்.

 

9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோப்புகள் தற்போது திறக்கப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லை. உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஒருபோதும் அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது..” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...