Date:

பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், குறித்த வீதியில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதிகளில் வௌ்ளநீர் வடிந்தோடியதைத் தொடர்ந்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டது.

 

இதன் காரணமாக பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373