Date:

27 நீர்த்தேக்கங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

 

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று நிரம்பி வழியும் நிலையில் உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் ஒன்று கொள்ளளவை எட்டியுள்ளதுடன் , மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் இரண்டு நிரம்பி வழியும் நிலையை அண்மித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...