Date:

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார்.

அவர் நேற்று இரவு (11) காலமானார், மரணமடையும் போது அவருக்கு 98 வயதாகும்.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், 1993 வரை 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

1977 முதல் 1989 வரை கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த இந்திரதாச ஹெட்டியாராச்சி, வயதில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் விளங்கினார்.

அன்னாரின் பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (13) இரவு முதல் ஹேனேகம, பொகுனுவிட்டவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

அதன்படி, இறுதிக் கிரியை புதன்கிழமை (15) பொகுனுவிட்ட, ஹேனேகம, ஜனசெத பொது மயான பூமியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சீரற்ற காலநிலையால் மீண்டும் மூடப்படும் பாடசாலைகள்

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை...

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். சிறீதர்

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு...

குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்

பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து  தேசிய கட்டிட...