Date:

இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் போலி அடிப்பகுதியில் 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக 26 வயது இளைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன வழங்கினார்.

தேவராஜா லோரன்ஸ் என்ற 26 வயது திருமணமாகாத இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள ஒரு நண்பருக்கு உணவு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாளியின் போலி அடிப்பகுதியில் 25.09 கிராம் ஹெராயினை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றபோது, ​​சந்தேகநபர், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடர்ந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதன்படி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...