Date:

குடியிருப்புகளின் கணக்கெடுப்பு நிறைவு

சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பிற்கமைய வீடற்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 07ம் திகதி முதல் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பில் மக்கள் மற்றும் வீடுகளின் தகவல்ளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பமானது.

தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பித்து ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொகைமதிப்பு அலுவலர் இதுவரை வீடுகளுக்குச் சென்று தகவல்களைப் பெறவில்லை என்றால், அது தொடர்பில் 1901 என்ற குறுகிய தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்குமாறும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும்...

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...