Date:

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென அறிக்கையொன்றில் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட்ட பெறுமதி வாய்ந்த பொருள்களை இழந்ததாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக நேற்று முன்தினம் உயர்ந்திர்ருந்தது.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட சிறிய, மத்தியதர புவியதிர்ச்சிகளால் கொங்கோ தலைநகர் கோமாவிலுள்ள கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச...

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய...

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...