Date:

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான மேலதிக நாள் இன்று

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான மேலதிக நாள் இன்றாகும்(18).

கடந்த 14ஆம் திகதி தமது தபால் மூல வாக்குகளை செலுத்தத் தவறிய அரச ஊழியர்கள், இன்று தமது வாக்குகளை செலுத்த முடியுமென காலி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் W.H.R.விஜயகுமார தெரிவித்தார்.

அதற்கமைய மாவட்ட அலுவலகங்களில் அரச ஊழியர்கள் தமது தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும்.

 

இதனிடையே, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான தபால் மூல வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சை குழு ஆகியன வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக காலி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் W.H.R.விஜயகுமார தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...