Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இன்று (16) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த குறித்த நபர் மீது இனந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் நபர் 35 வயதுடைய மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்த இர்ஷாத் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

அவருடன் பயணித்த மற்றைய நபருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் நீல நிற கார் ஒன்றில் வந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாவும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373