Date:

துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப்பெற நடவடிக்கை

தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6(1) மற்றும் 6(2) இன் கீழ் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி துப்பாக்கிகளை தற்காலிக அடிப்படையில் அரசாங்கம் கையகப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மேலும், இவற்றை உரிய முறையில் மீள்பரிசீலனை செய்த பிறகு அவை மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இதன்படி, அனுமதி பத்திரம் பெறப்பட்டு துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தன்வசம் வைத்துள்ள அனைத்து உரிமையாளர்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவில் (CEFAP) ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...