Date:

பேரூந்து கட்டணத்தை குறைக்க கலந்துரையாடல்

எரிபொருள் விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

கடந்த கட்டண திருத்தத்தின் போது ஆட்டோ டீசலின் விலை 11 ரூபாவினாலும் இன்றைய நிலவரப்படி 24 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதால் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

எரிபொருள் விலை குறைந்த போதிலும், டயர்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாக அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பெட்ரோலின் விலை 300 ரூபாவுக்கு கீழ் குறைக்கப்பட்டால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...