Date:

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இன்று (04) முதல் 8 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

கொவிட் பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது.

இதன் காரணமாக அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.

அதேநேரம், நாளைய தினம், நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.

கனிய எண்ணெய் வள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அது தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம்,  இந்த வார நாடாளுமன்ற அமர்வில் நிதியமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373