Date:

வாக்கு பெட்டிகளை மாற்ற முடியாது

வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண் வரை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குளிப்பு நிலையத்தின் பெயர், பின்வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகனத்தில் உள்ள பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளிட்ட விரிவான தகவலை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரால் வாக்களிப்பு தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

 

அதற்காக வழங்கப்படும் வாகன உரிமத்தை சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரரேஷ்ட வாக்குளிப்பு நிலைய அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டி எந்த மாற்றமும் இன்றி வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கப்படுமா? என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...