Date:

துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி

ஸ்ரீபுர, கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த இளைஞரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

 

இந்தக் குற்றச்செயலுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஶ்ரீபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இர‌வு வரை அபாய எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும்...

பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர்...

உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4...

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...