பிரேசில் – சவோபவ்ரோ பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானமானது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருப்பு பகுதியிலிருந்து எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் 57 பயணிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இவ்வாறு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.