ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று (11) காலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பயணித்த 2 படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்தில் பேருந்தும், வேனும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் பேருந்தின் தொடர்புடைய கைது விபத்து சாரதி செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.