Date:

இலங்கை வருகின்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்தே, நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கருடன் இன்று கலந்துரையாடல்களை நடாத்திய போதே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 

மேலும், இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள இந்திய முதலீட்டு திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373