Date:

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு : மைத்திரியின் முடிவு முரணானது!

கொழும்பு – ராஜகிரிய – ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதிவாதிக்கு வழங்கிய பொதுமன்னிப்பை செலுபடியற்றதாக்குவதற்கு உயர்நீதிமன்றம் இன்று (06) தீர்மானித்தது.

ராஜகிரிய – ரோயல் பார்க் வீட்டுணீ தொகுதியில் 2005ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவை, குற்றவாளியாக அடையாளம் கண்ட உயர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது.

 

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவிற்கு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி வகித்த 2019ம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி யாரும் எதிர்பார்க்காத...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...