Date:

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு : மைத்திரியின் முடிவு முரணானது!

கொழும்பு – ராஜகிரிய – ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதிவாதிக்கு வழங்கிய பொதுமன்னிப்பை செலுபடியற்றதாக்குவதற்கு உயர்நீதிமன்றம் இன்று (06) தீர்மானித்தது.

ராஜகிரிய – ரோயல் பார்க் வீட்டுணீ தொகுதியில் 2005ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவை, குற்றவாளியாக அடையாளம் கண்ட உயர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது.

 

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவிற்கு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி வகித்த 2019ம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373