Date:

இலங்கையில் வறுமை வீதம் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10% ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டு மக்களின் துயரம் எனக்குப் புரிகிறது. இந்த நாட்டில் 2019 இல் 15% ஆக இருந்த பொது வறுமை இன்று 26% ஆக அதிகரித்துள்ளது. வருமான ஆதாரமும், கல்வி வசதியும் இல்லாத ஒரு பிரிவினர் உள்ளனர். அதன்படி, 2032ஆம் ஆண்டுக்குள் அதை 10% ஆகக் குறைக்க இப்போது ஒப்புக்கொண்டுள்ளோம்.

 

இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

 

மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்” என்றார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “லெஸ்லி தேவேந்திர சிங்கவலோகனயா” என்ற தலைப்பிலான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஷ்யாவிற்கு ரணில் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் ​மேலும், 22 ஆம் திகதி நாடு...

NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த...

இலங்கையில் ஏற்பட்ட இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ...

கல்வியமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.என்.எப். நஸ்ரியா முனாஸ் நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373