Date:

நுவரெலியாவில் வீட்டின் மீது மரம் விழுந்து வீடு தீப்பிடித்தது.

நானுஓயா நிருபர் (மலையக நிருபர்)

 

 

நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிலும் தற்பொழுது நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் குறித்த வீட்டுக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து வீடு தீப்பிடித்துள்ளது

 

இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

 

குறித்த வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டின் அருகாமையில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் வீட்டின்மேல் விழுந்தமையால் வீட்டிற்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்குகே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...