ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்திய கடற்பரப்பிற்குள் 7 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை பணியாளர்களுடன் ஐந்து இலங்கை மீன்பிடி படகுகளை கைது செய்ததாக இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் மரைன் பொலிஸாரிடம் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டனர்.