Date:

தக்காளி விலையில் சரிவு !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (17) ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகக் குறைந்திருந்தது.

ஒரு கிலோ போஞ்சியின் விலை 40 ரூபா வரையும், ஒரு கிலோ முள்ளங்கியின் விற்பனை விலை 35 ரூபா வரையும், ஒரு கிலோ கெக்கரி மற்றும் வெள்ளரிக்காயின் விற்பனை விலை 20 ரூபா வரையும், ஒரு கிலோ பீக்கங்காயின் விலை 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், பயிற்றங்காய், பொலஸ் மற்றும் புடலங்காய் ஆகியவற்றின் மொத்த விலை தலா 50 ரூபாவாகவும் குறைந்துள்ளன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளைக் கொண்டுவந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.

தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாகக் குறைந்திருந்த போதிலும், நேற்று (17) புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் போஞ்சி கிலோ 120 ரூபாவுக்கும், கேரட் கிலோ 300 ரூபாவுக்கும், கறிவேப்பிலை கிலோ 100 ரூபாவுக்கும், கத்தரிக்காய் கிலோ 180 ரூபாவுக்கும் விற்பனையாகின.

நேற்று புறக்கோட்டை சில்லறை விற்பனைச் சந்தையில் காய்கறிகளுக்கான தேவையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...