Date:

வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படமாட்டாது ! – அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு

உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி, போலியான இலக்கங்கள் ஊடாக மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பெயரையும், உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அஞ்சல் திணைக்களம், தமது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் ஒருபோதும் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்கள் கோரப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின்...

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...