Date:

கொழும்பில் இருந்து மரண வீட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு !

கெபித்திகொல்லேவ – கோலிபெந்த ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் மற்றுமொரு குழுவினருடன் வீட்டிற்கு அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது நான்கு பேர் ஏரியில் மூழ்கிய நிலையில், இருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இறுதி ஊர்வலத்தின் போது மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்கச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவிப்பு

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard

Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373