Date:

அரசாங்க மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவருக்கும் அனுமதி: காசல் மருத்துவமனை பணிப்பாளர் தகவல் !

மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்.

மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக  காசல் மருத்துவமனை (Castle Hospital) அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறையினால் கர்ப்பிணிப் பெண்கள் தமது குழந்தைகளை நல்ல மனநிலையுடன் பிரசவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இப் புதிய திட்டத்தினூடாக பிரசவ வேதனையானது தனது கணவனுடன் பகிரப்படுவதோடு, தாய்-தந்தை-குழந்தை உறவு படி நிலை மேலும் உறுதியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவன்மாரை அனுதிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ள நிலையில்,  அரசாங்க மருத்துவமனைகளிலும் முதன் முறையாக அனுமதிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...