Date:

குவைத்திலிருந்து தன் எஜமானரையும் அழைத்து வந்த மனைவி – கோபம் கொண்டு வீட்டுக்கு தீ வைத்த கணவன் !

பிபில பகுதியில் நபர் ஒருவர் தன் வீட்டை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரின் மனைவி குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தான் வேலை செய்த வீட்டின் எஜமானரான 80 வயது முதியவரை அழைத்து வந்த நிலையில், அவர் வீட்டில் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

மனைவி, குவைத் நாட்டவர் மற்றும் வீட்டில் இருந்த 76 வயது முதியவர் ஒருவர் உள்ளிட்டோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் நபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும் அவர் தற்போது குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிபில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்த போதிலும், வீடு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373