நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் 12 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகாதோரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகமாககக் காணப்படும் என்று மருத்துவ ஆய்வு கூடத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும் சிறுவர்களுக்கு இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.