Date:

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு – திருகோணமலையில் சோகம் !

 

 

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன்  மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவத்தில்  திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞரே  காயம் அடைந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373