Date:

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த ரணில் – பசில் பேச்சுவார்த்தை !

 

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இணக்கப்பாட்டை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் எதிர்கால தேர்தல்கள் தொடர்பில் விரைவில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...