
  
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று (20) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
எனினும் அப்போது எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.
விரைவில் பதவி விலகலை எழுத்துப்பூர்வமாக வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

                                    




