Date:

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் !

 

 

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கியழிக்கும் பொலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.

உள்ளூர்நேரப்படி இன்று (19) காலை 7.44 மணியளவில் இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று (18) அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதனை செய்தது.

தென்கொரியாவும் அமெரிக்காவும் அவ்வப்போது மேற்கொண்டுவரும் கூட்டுப் போர் பயிற்சிகள், வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

கடைசியாக கடந்த மாதத்தில், வடகொரியா ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டது.

தற்போது மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...