Date:

திருகோணமலையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் !

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில்  உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தாக்குதல் இடம்பெற்ற வேளை வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...