Date:

கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசுவின் சடலம் மீட்பு!

ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்தநிலையில், நீதவானின் உத்தரவின் பேரில் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...