Date:

பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களில் 53 வீதமானவர்களுக்கு பாடசாலை புத்தகப் பை ஒன்றை கொள்வனவு செய்யக்கூட முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 43 இலட்சம் மாணவ, மாணவிகள் பாடசாலை செல்வதாகவும், அவர்களில் சுமார் 1,30,000 மாணவர்கள் இடை விலகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாடசாலை மாணவர்கள் இடை விலகுவது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமையும் எனவும் அறிவார்ந்த இலங்கை சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இடையூறாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 28 லட்சம் மக்கள் நுண்கடன் திட்டத்தில் சிக்கி உள்ளதாகவும், நுண்கடன்களை செலுத்த முடியாத 200க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடன் பொறியில் சிக்குபவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373