Date:

பரீட்சை வினாத்தாளில் ஒரு நாடு : இரு தேசம் வினா பொலிஸார் விசாரணை !

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப் படும் தரம் 11 தமிழ் மொழி பாடப் பரீட்சை வினாத்தாளில் ‘ஒரு நாடு : இரு தேசம்’ தொடர்பாக இடம்பெற்றுள்ள வினாவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் 11ஆம் தர மாணவர்களுக்கு நடத்தப்படும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் தமிழ் மொழிக்கான பரீட்சை கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ் மொழி பாடத்தின் பகுதி 1 வினாத்தாளில் மிகப்பொருத்தமான விடையை தெரிவு செய்க என்ற தலைப்புடன் காணப்பட்ட வினாக்களில்,

‘ஒரு நாடு: இரு தேசம்’ என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் (1) தனி வாக்கியம் (2) கலப்பு வாக்கியம். (3) தொடர் வாக்கியம் (4) கூட்டு வாக்கியம் என காணப்பட்டது.

இந்த வினாத்தாள் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, வைரலானது.

இந்த கேள்வி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...