Date:

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 60 ரூபாயாக காணப்படுகிறது.

எனினும் சந்தைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதன் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...