Date:

மரத்தின் கிளை விழுந்து மற்றுமொரு சிறுவன் பலி!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டப் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நியூட்டன் தோட்டம், டிக்கோயா பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தோட்டத்தின் நடுவில் நடந்து சென்றபோது, ​​தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள மரத்தை சிலர் வெட்டியுள்ளனர்.

வெட்டப்பட்ட மரம் மற்றுமொரு மரத்துடன் மோதியதில் அந்த மரத்தின் கிளை முறிந்து சிறுவன் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரத்தை வெட்டிய 05 சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்த நிலையில், சந்தேகநபர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (05) கம்பளை சர்வதேச பாடசாலைக்கு அருகாமையில் மரம் ஒன்று விழுந்ததில் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...