Date:

மீண்டும் இலங்கை வந்தார் யுவன் !

 

தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவகல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காகவே யுவன்சங்கர் ராஜா இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

யுவன் லோங் டிரைவ்வினுடைய முன்னாயத்த கலந்துரையாடல்கள் இன்று மாலை கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவை காணாவிரும்பும் ரசிகர்கள் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுர முன்றலிற்கு வருகை தருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக அவரது சகோதரரான யுவன் சங்கர் ராஜா கடந்த 25 ஆம் திகதி இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தகக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...