Date:

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி!

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பிட்டி – பலாவியா வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டியிலிருந்து பலாவியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் திரும்பும் போது அந்த வீதிக்கு முன்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது 2 முச்சக்கர வண்டிகளில் சாரதிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

65 வயதுடைய கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...